search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளம் அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
    X

    கூடங்குளம் அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

    • அந்தோணியை 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது.
    • படுகாயம் அடைந்த அந்தோணியை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பீட்டர் தெருவை சேர்ந்தவர் ரோசாரி. இவரது மகன் அந்தோணி (வயது 35).

    சரமாரி வெட்டு

    இவருக்கு ஷீலா (32) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். அந்தோணி மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தோணி தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தோணியை சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அந்தோணியை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரணம் என்ன?

    அதில் கடந்த 2 நாட்களாக அந்தோணி ராஜ் தனது உறவினரின் மகன்களுடன் ஒன்றாக மீன் பிடிக்க சென்றதாகவும், பின்னர் எல்லோரும் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட குடிபோதை தகராறில் முன் விரோதம் ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×