வள்ளியூர் அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு

வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்த திவ்யா நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
வள்ளியூர் அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு
Published on

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரூபசேகர். இவரது மனைவி திவ்யா (வயது31). இவர் வள்ளியூரில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.

இதற்காக அவர் வீட்டில் இருந்து தனது மொபட்டில் வள்ளியூர் சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அவர் வள்ளியூர்-சவுந்திரபாண்டியபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com