search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலைக்கரைப்பட்டி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்
    X

    மூலைக்கரைப்பட்டி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்

    • மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா (வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
    • ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    களக்காடு:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருக்கும், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா(வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    திருமணத்திற்கு பின் லெட்சுமணன் தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ஜெய சுதாவின் 10 பவுன் நகைகளை பெற்று அடமானம் வைத்துள்ளார். அதுபோல அவரது சகோதரர் அய்யப்ப னுக்கு, ஜெயசுதாவின் 5 பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.

    இதுபற்றி ஜெயசுதா தட்டிக்கேட்டதால் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின் லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து ரூ.1.50 லட்சம் தந்துவிடுவதாகவும், விவாகரத்து மனுவில் கையெழுத்து போடும்படியும் மிரட்டி கையெழுத்தை பெற்று நாங்குநேரி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயசுதாவிற்கு தெரியாமல் லெட்சுமணன் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த தங்கசெல்வம் என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த ஜெயசுதா நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன், உறவினர் தங்க செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×