search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலி
    X

    நெல்லை அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

    • லிங்கதுரை தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார்.
    • வேகமாக சென்ற கார் அங்குள்ள மரத்தின் மீது மோதியது.

    நெல்லை:

    திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் லிங்க துரை(வயது 28).

    மரத்தில் மோதியது

    இவர் தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். நேற்று அங்கிருந்து மீண்டும் காரில் இட்டமொழிக்கு திரும்பினார். அப்போது அவருடன் அவரது சகோதரியின் 6 வயது மகன் அமலேஷ் புறப்பட்டு வந்தார்.

    நேற்று மதியம் நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள மான் பூங்கா அருகே மரத்தின் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாட்டில் சிக்கி காரை ஓட்டி வந்த லிங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதிர்ஷ்டவசமாக சிறுவன் அமலேஷ் காயமின்றி உயிர் தப்பினான்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கங்கைகொண்டான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த லிங்கதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×