உளுந்தூர்பேட்டை அருகே 3 மாதத்திற்கு முன்பாக திருமணமாகிய இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே 3 மாதத்திற்கு முன்பாக திருமணமாகிய இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் கனகவள்ளி (வயது 20). நர்சிங் முடித்துள்ளார். இவருக்கும் பக்கத்து கிராமமான பாட்சா பாளையத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளி சுகனேஷ் (25) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு கனக வள்ளியின் பெற்றோர், சுகனேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு சீர் வரிசை வைத்து, கனகவள்ளியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த கனகவள்ளி சோகமாகவே இருந்துள்ளார். புதியதாக திருமணமாகி கணவனை பிரிந்ததால் சோகமாக இருப்பதாக பெற்றோர் கருதினர். 

இந்நிலையில் வீட்டில் படுத்துறங்கிய கனகவள்ளி இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வீட்டிலிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கிருந்த மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறியழுத காட்சி அக்கம் பக்கம் இருந்தவர்களிடையே நெகி ழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை போலீ சார், கனகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், கனவள்ளி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சிறுபாக்கம், பாட்சா பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com