கோத்தகிரியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் நிற பேப்பர் பூ

இந்த பூவினை பேப்பர் பூ என கூறுவார்கள் இதன் மீது தண்ணீர் பட்டவுடன் பூவானது தானாகவே மூடிக்கொள்ளும் சாலை பகுதிகளில் தான் இந்த பூக்கள் அதிகம் வளரும்.
கோத்தகிரியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் நிற பேப்பர் பூ
Published on

அரவேணு

கோத்தகிரி பகுதிகளில் மஞ்சள் நிற பேப்பர் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இதன் மீது தண்ணீர் பட்டவுடன் பூவானது தானாகவே மூடிக்கொள்ளும் வெயில் பட்டவுடன் தானாக விரிந்து கொள்ளும் தன்மை கொண்டது.

இந்த பூ 3 நாட்களுக்கு அல்லது 4 நாட்கள் வரை பறித்த பின்னும் வாடாமல் இருக்கும். இந்த பூவின் மீது சுற்றுலா பயணிகளுக்கு அதிகமான ஈர்ப்பு உள்ளது.

இப் பூவினை சுற்றுலா பயணிகள் 5 பூக்கள் ரூ.10, 20 பூக்கள் ரூ.20 ெகாடுத்து வாங்கி வருகிறார்கள். சுற்றுலா பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்ற சுற்றுலா பூவாகும். சாலை பகுதிகளில் தான் இந்த பூக்கள் அதிகம் வளரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com