search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
    X

    தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ பிடித்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிய காட்சி.

    பரமத்திவேலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    • பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் நார்மில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
    • தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெரிய கரசப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் நார்மில் தொழி ற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நார்மில் தொழிற்சா லையில் தேங்காய் மட்டை களில் இருந்து தனியாக தேங்காய் நார் பிரித்து எடுக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் நாரை கட்டிகளாக தயார் செய்தும், தேங்காய் நாரை தூளாக அரைத்தும் தனித்தனியாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பி த்தது.

    இதனை பார்த்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தேங்காய் நாரில் பிடித்த எரியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை.

    இது குறித்து உடனடியாக நாமக்கல்லில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இருப்பினும் தேங்காய் நார் மஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்த 30- க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள், கன்வேயர் பெல்ட்டுகள், தேங்காய் நாரை பில்டர் செய்யும் சல்லடைகள், மட்டை போடும் கூண்டுகள், தேங்காய் நார்கள் உட்பட அனைத்தும் எரிந்து நாசமானது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் வரை இருக்கலாம் என தேங்காய் நார் தொழிற்சாலையின் உரிமையாளர் பிரபாகர் தெரிவித்தார்.

    Next Story
    ×