search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே பிளஸ்-2 மாணவியை அழைத்து சென்ற வாலிபர்
    X

    பொள்ளாச்சி அருகே பிளஸ்-2 மாணவியை அழைத்து சென்ற வாலிபர்

    • 18 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • மாணவி பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பரா ம்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஆனைமலையை சேர்ந்த பவின் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் கற்க வைத்தனர். ஆனாலும் மாணவி பவினுடனான காதலை தொடர்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடினர். அப்போது தனது காதலன் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் மாணவி இருப்பது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற பவினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×