ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பிணமாக கிடந்தவர் உடல் அழுகி உருக்குலைந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.
ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
Published on

சேலம்:

சேலம் ரெயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காகங்கரை- சாமல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவர் உடல் அழுகி உருக்குலைந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் காணப்பட்டார். அவரை பற்றி தெரிந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் சொல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com