search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே காதல் மனைவியை ரோட்டில் தவிக்க விட்டு சென்ற வாலிபர்
    X

    சூலூர் அருகே காதல் மனைவியை ரோட்டில் தவிக்க விட்டு சென்ற வாலிபர்

    • 2 பேரும் 24-ந் தேதி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர்.
    • புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தனர்.

    கோவை,

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். கூலித் தொழிலாளியான இவர் துடியலூரில் உள்ள தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது இவருக்கும், சூலூர் ஜெர்மன் கார்டனை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டு களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காத லுக்கு எதிர்ப்பு தெரிவி த்தனர்.

    கடந்த மாதம் 15-ந் தேதி இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் தனது மகளை மீட்டு தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    போலீசார் தேடு வதை அறிந்த காதலர்கள் போ லீஸ் நிலையத்தில் ஆஜ ரானார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய விசார ணையில் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி பெற்றோ ருக்கு தெரியாமல் திரும ணம் செய்தது தெரிய வந்தது.

    பெண்ணின் பெற்றோர் அவரை தங்களுடன் வரு மாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்து தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் சூலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர்.

    சூலூரில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே சென்ற போது பெண்ணிடம், அந்த வாலிபர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், எனவே நான் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என கூறி விட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் திரும்பி வர வில்லை. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. வாலிபர் அவரது காதலி யை திருமணம் செய்த 10-வது நாளில் ரோட்டில் தவிக்க விட்டு சென்றார்.

    இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் காதல் மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×