search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் கொலை?
    X

    உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் கொலை?

    • கால் துண்டான நிலையில் சாலையோரம் கிடந்த உடல்
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள உதயாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நீதி மணி. இவரது மகன் ராஜேஷ் (வயது 38). தியாகதுருகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலப்பாக்கம் பகுதியில் இருந்து செம்பி யன்மாதேவி கிராமம் செல்லும் வழியில் சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இடது கால் துண்டான நிலையில் ராஜேஷ் உயிரிழந்து கிடந்தார்.

    இது குறித்து எலவனாசூர் கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஷ் நள்ளிரவில் எதற்காக அங்கு வந்தார்? அவர் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாரா? அல்லது படுகொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் எலவனாசூர் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜேசுக்கு திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Next Story
    ×