என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
- செல்வக்குமார் தனது நண்பர்களுடன் ஊத்துக்குளி வழியாக செல்லும் ஆற்றில் குளிக்க சென்றனர்.
- செல்வகுமாருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.
கோவை,
திருப்பூர் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 21). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் அவரது நண்பர்களான சபரிகிரி (25), அருண்குமார் (25) ஆகியோருடன் ஆழியாறு அருகே உள்ள பூவல்லபருத்தியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு வைத்து மது குடித்தனர். பின்னர் 3 பேரும் குளிக்க முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் ஜமீன் ஊத்துக்குளி வழியாக செல்லக்கூடிய ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது செல்வகுமார் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீர் அவரை அடித்து சென்றது. அப்போது அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் செல்வக்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது நண்பர்கள் பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட செல்வக்குமாரின் உடலை தேடினர்.
பின்னர் போலீசார் ராமர்கோவில் வீதி உள்ள பகுதியில் இருந்து உடலை மீட்டனர். இதனையடுத்து போலீசார் செல்வக்கு மாரின் உடலை பிரேத பரிசோ தனைக்கு பொ ள்ளாச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொள்ளா ச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






