என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்24 March 2023 9:21 AM GMT
- விபத்தில் பவிஸ் சம்பவ இடத்திலயே பலியானார்.
- காயம் அடைந்த ஹரிகரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
கோவை,
நீலகிரி மாவட்டம், எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (27) கூலித் தொழிலாளி. இவரது மகன் பவிஸ் (23), சம்பவத்தன்று பவிஸ் மற்றும் அவரது நண்பர் ஹரிகரன் தங்கள் நண்பர் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் புட்டுவிக்கியில் இருந்து கோவைப்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ஹரிகரன் ஓட்டி வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பவிஸ் சம்பவ இடத்திலயே பலியானார்.
இதில் படுகாயமடைந்த ஹரிகரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X