என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் மயங்கி விழுந்து வாலிபர் பலி
கோவை,
சேலத்தை சேர்ந்தவர் தாயுமானவன் (27). இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையில் இருந்த தாயுமானவன் உடற்பயிற்சி செய்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






