search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
    X

    விபத்தை ஏற்படுத்திய கார்.

    நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

    • முருகானந்தம் நேற்று இரவில் வேலை முடிந்ததும், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
    • நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம் பாட்டை சேர்ந்த வர் முருகானந்தம் (வயது 36). இவர் வள்ளியூரில் உள்ள ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவில் வேலை முடிந்ததும், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். நாங்கு நேரி-மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகானந்தம் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கலந்தபனையை சேர்ந்த ஸ்டான்லி (30) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×