search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பேராசிரியையிடம் நகை பறித்த டாக்சி டிரைவர்
    X

    கோவையில் பேராசிரியையிடம் நகை பறித்த டாக்சி டிரைவர்

    • ஜெயாகவுரி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    குனியமுத்தூர்,

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி ஜெயாகவுரி (வயது 44). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஜெயாகவுரியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயாகவுரி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த டாக்சி டிரைவர் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது. விசாரணை முடிந்ததும் போலீசார் கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×