search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் இன்று காலை திருமண வீட்டு பந்தலில் திடீர் தீ விபத்து  - மணமக்கள் உயிர் தப்பினர்
    X

    தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த திருமண பந்தல்.

    பேட்டையில் இன்று காலை திருமண வீட்டு பந்தலில் திடீர் தீ விபத்து - மணமக்கள் உயிர் தப்பினர்

    • விக்ரமன் மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
    • இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு ஓலை பந்தல் போடப்பட்டது.

    திடீர் தீ விபத்து

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது. இதனால் பந்தல் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    உடனடியாக வீட்டி லிருந்த மணமகன் மற்றும் மணமகள், உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    திருமண பந்தல் எரிந்து நாசம்

    இது குறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் திருமண பந்தல் தீயில் எரிந்து நாசமானது.

    இது தொடர்பாக அப்பகுதி நரிக்குறவர் காலனி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய மின் வயர்கள் பொருத்தப்படவில்லை. எனவே இன்று காலை மின் விபத்து ஏற்பட்டு பந்தல் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.

    எனவே உடனே எங்கள் பகுதியில் பழைய மின் வயர்களை மாற்றி புதிய மின் வயர்கள் பொருத்த வேண்டும் எனக் கூறினர்.

    Next Story
    ×