search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் அடுத்தடுத்து விபத்து   லாரி மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலி
    X

    சேலத்தில் அடுத்தடுத்து விபத்து லாரி மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலி

    • வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாமாங்கலம் பகுதியில் நேற்றிரவு 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி விசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் கருப்பூரை அடுத்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 48), இவர் நேற்றிரவு டால்மியா போர்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தூத்துக்குடியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது . இதில் லாரியின் முன் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ராஜா இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×