தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய ரவுடிக்கு வலைவீச்சு

பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார். ஆத்திரமடைந்த அறிவு பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கினார்.
தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய ரவுடிக்கு வலைவீச்சு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை நியூ பார்த்திமா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது 58) தொழிலாளி.

இவர் சைக்கிளில் விளார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

ஒரு தனியார் மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.

அப்போது அவர் குடிக்க தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு மைக்கேல் ராஜிடம் கேட்டார்.

அதற்கு அவர் என்னிடம் தண்ணீர் பாட்டில் இல்லை என்று கூறினார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அறிவு மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மைக்கேல்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து ரவுடி அறிவை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com