search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரிக் வண்டி தொழிலாளி மர்மசாவு
    X

    ரிக் வண்டி தொழிலாளி மர்மசாவு

    • பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியில் ரிக் வண்டி தொழிலாளி மர்மான முறையில் பாலியானர்.
    • இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (வயது 53).இவர் தனது மனைவி குப்பாயியுடன் வசித்து வந்தார்.

    செங்கோட்டுவேலு‌ ரிக் வண்டி ஒன்றில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை குப்பாயி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு மயங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி போலீசார், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டுவேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தன்று செங்ேகாட்டுவேலுவை யாரேனும், தாக்கினார்களா? அல்லது விஷம் குடித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×