search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே அதிகமாக சிக்கன் உணவு சாப்பிட்டவர் திடீர் சாவு
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல் அருகே அதிகமாக சிக்கன் உணவு சாப்பிட்டவர் திடீர் சாவு

    • நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது
    • சிக்கன் மற்றும் மீன் உணவுகளை அதிக அளவு சாப்பிட்டதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்த சோலமலை மகன் வசந்தகுமார் (வயது22). கூலி வேலை பார்த்து வருகிறார். வசந்தகுமார் நேற்று விடுமுறை என்பதால் மதியம் வீட்டில் சமைத்த சிக்கன் உணவை அதிக அளவு சாப்பிட்டுள்ளார்.

    பின்னர் மாலையில் பொறித்த மீன்களை சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தனது தந்தையிடம் வசந்தகுமார் கூறி உள்ளார்.

    ஜீரணத்துக்காக குளிர்பானம் குடித்த நிலையில் சிறிது தூரம் நடந்து செல்வதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு ஊருக்கு வெளியே மயங்கிய நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார். உடனே ஆம்புலன்சுக்கு அவரது பெற்றோர் போன் செய்து வரவழைத்தனர்.

    அவரை பரிசோதித்த ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு சின்னாளபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துஅவரது உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிக்கன் மற்றும் மீன் உணவுகளை அதிக அளவு சாப்பிட்டதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்

    Next Story
    ×