ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய பயணிகள் நிழற்குடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.
புதிய பயணிகள் நிழற்குடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.
Published on

நெல்லை:

களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், ராஜகோபால், சீவலப்பேரி ஊராட்சி தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் லலிதா, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், துணை தலைவர் காமராஜ், மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், கிழக்கு வட்டார தலைவர் சங்கரபாண்டி, கவுன்சிலர்கள் சங்கீதா ஆண்ட்ரூ, முத்துபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் ஓபேத், முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.ஆர்.துரை, வில்சன், தங்கராஜ், வேலுச்சாமி, வேலம்மாள், ஶ்ரீ தேவி, முருகன், சுகுமார், தி.மு.க. நிர்வாகி செந்தில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com