

குனியமுத்தூர்,
கோவையை அடுத்த கோவைப்புதூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் தாரணி(41). இவர் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் 4 கால்களும், வாயும் கட்டப்பட்ட நிலையில் ஒரு நாய் கிடப்பதை கண்டார். உடனே திரும்பி வீட்டுக்கு சென்று, தனது மகனை அழைத்துக் கொண்டு அந்த நாயை தூக்கிக் கொண்டு செல்வபுரம் விலங்குகள் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அந்த நாய்க்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்தது. பின்னர் அது யாருடைய நாய் என்று விசாரிக்கும் போது, கோவைப்புதூர் பாரதிநகரை சேர்ந்த கிருபாகரன் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என்பது தெரியவந்தது. எனவே கிருபாகரன் மீது குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனிடம் விசாரித்து வருகின்றனர்.