என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் அருகே தாழ்வாக பறந்த போர் விமானத்தால் பரபரப்பு
- திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி விமானங்கள் தாழ்வாக பறப்பது வாடிக்கையாக உள்ளது.
- விமானம் தங்கள் ஊரில் வட்டமடித்து செல்வதை கிராமமக்கள் ஆச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி விமானங்கள் தாழ்வாக பறப்பது வாடிக்கையாக உள்ளது. அதிலும் போர் விமானங்கள் போன்றவை நகரில் செல்லும்போது பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
அதேபோல வடமதுரை, கொம்பேறிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலையில் தாழ்வாக பறந்த போர்விமானம் கிராமமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
அது உண்மையிலேயே போர் விமானமா என தெரியாத நிலையில் வான்வெளியில் இருந்தபடியே சாகசம் செய்தபடி சுற்றிச்சுற்றி வந்தது. இதனால் அதுபோர் விமானமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மக்களை பார்த்து கையசைத்ததும், உற்சாக குரல் எழுப்பியதும் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பல்வேறு ஊர்களில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழலில் இதுபோன்ற விமானம் தங்கள் ஊரில் வட்டமடித்து செல்வதை கிராமமக்கள் ஆச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்