தேனியில் சரக்கு வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

தேனியில் சரக்கு வாகனம் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்டம் கோம்பை திரு.வி.க. தெருவைச் சேர்ந்த சின்ன மாரி முத்து மகன் சிலை ராஜா (வயது 32). மரம் வெட்டும் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கோம்பை - உத்தமபாளையம் சாலையில் குடிசை மாற்று வாரிய கட்டிடத்துக்கு எதிரே சென்று கொண்டு இருந்த போது அவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சதீஸ்குமார் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com