search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி
    X

    கோப்பு படம்.

    நத்தம் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி

    • கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பரளிநோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் முகமதுயாசின் (27). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பரளிநோக்கி சென்று கொண்டிருந்தார்.

    வலையபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து வந்த மினிவேன் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் முகமதுயாசின் இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×