வடலூரில் கிணற்றில் பிணமாக கிடந்த மாற்றுத் திறனாளி

போலீசார் அந்தோணி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வடலூரில் கிணற்றில் பிணமாக கிடந்த மாற்றுத் திறனாளி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் தெய்வ சகாயம். இவரது மகன் அந்தோணி ராஜ் (வயது 23). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று அந்தோணி ராஜ் வீட்டில் இருந்தவர் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அந்தோணி ராஜை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதே பகுதியில் தரை கிணறு உள்ளது.

அங்கு சென்று பார்த்த போது தண்ணீரில் மூழ்கி அந்தோணி ராஜ் பிணமாக கிடந்தார். இத்தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தோணி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com