search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டியானை
    X

    தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டியானை

    • காட்டுயானை கூட்டம் விலகி சென்றது.
    • பிறந்து 1 வாரமே ஆன குட்டியானை

    பந்தலூர்

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே சேலக்குன்னு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு குட்டியானை இறந்து கிடப்பதாக பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் கிருபாகரன், வனவர்கள் பெலிக்ஸ், ஜார்ஜ், பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

    ஆனால் அங்கு தாய் யானை அடங்கிய காட்டுயானை கூட்டம் முகாமிட்டு இருந்தது. இதனால் வனத்துறையினர் அருகில் செல்ல முடியவில்ைல. சிறிது நேரம் கழித்து காட்டுயானை கூட்டம் அங்கிருந்து விலகி சென்றது. இதையடுத்து வனத்துறையினர் அருகில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது இறந்து கிடப்பது பிறந்து 1 வாரமே ஆன குட்டியானை என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிதிர்காடுவனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டியானையின் உடலை கூடலூர் வன அலுவலர் ஓம்கார், உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார், நெலாக்கோட்டை கால்நடை டாக்டர் சாருண்யா மற்றும் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் இறந்தது பெண் குட்டியானை என்பதும், உடல் நலக்குறைவால் இறந்துள்ளதும் தெரியவந்தது.

    Next Story
    ×