search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரஅள்ளியில்  ஊராட்சி மன்ற பணியில் முறைகேடு  கலெக்டரிடம் புகார் மனு
    X

    மனு அளிக்க வந்த ஊராட்சி மன்ற துணை தலைவர்.

    பத்ரஅள்ளியில் ஊராட்சி மன்ற பணியில் முறைகேடு கலெக்டரிடம் புகார் மனு

    • ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பங்களை போலியாக அரசு பதிவேடுகளில் போடுகிறார்.
    • ஊராட்சி செயலாளரும் உடந்தையாக செயல்படுகிறார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பத்ர அள்ளி ஊராட்சியின் துணைத் தலைவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம் பத்ர அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பணியாற்றி வருகிறேன். ஊராட்சி மன்ற தலைவராக சீரங்காயி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். ஆனால் இதுவரை ஊராட்சி மன்ற தலைவராக இவரது கணவர் தங்கராஜ் செயல்பட்டு வருகிறார்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரின் இருக்கையில் அமர்வது, ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பங்களை போலியாக அரசு பதிவேடுகளில் போடுவது, ஊராட்சி மன்ற நிதிகளை தவறுதலாக கையாண்டு கையாடல் செய்வது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

    மாதாந்திர கூட்டங்களை நடத்துவதே இல்லை. ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தியது போல் தீர்மானங்களை நிறைவேற்றி யது ,வார்டு உறுப்பினர்களின் கையொப் பங்களை அவரே போட்டுக் கொண்டு அதிகாரிகளை ஏமாற்றுகிறார். இதற்கு ஊராட்சி செயலாளரும் உடந்தையாக செயல்படுகிறார்.

    இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இது போன்ற பல வெளியில் தெரியவராத குளறுபடிகள் பல நடந்த வண்ணம் உள்ளன.

    ஆகவே எனது புகாரின் பேரில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுவதுடன் எங்கள் ஊராட்சி மன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடர்பாக வெளிப்படை யான சிறப்பு தணிக்கையினை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×