கடமலைக்குண்டுவில் இளம்பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக இளம்பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

கடமலைக்குண்டு அருகில் உள்ள பொன்ன ம்மாள்பட்டியை சேர்ந்த சேகர் மனைவி முருகேஸ்வரி (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்பு ச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று துரை ச்சாமி புரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் முருகேஸ்வரி இருந்தார். அங்கு வந்த கருப்புச்சாமி, விஸ்வா, சித்திரைவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து முருகே ஸ்வரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்த னர்.

படுகாயமடைந்த முருகேஸ்வரி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com