search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே 4 வழிச்சாலையில் பாலம் கட்ட வேண்டும்   அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை
    X

    4 வழிச்சாலை பணிகளை கலெக்டர் விசாகன், வேலுச்சாமி எம்.பி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    செம்பட்டி அருகே 4 வழிச்சாலையில் பாலம் கட்ட வேண்டும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை

    • ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஜெ.மெட்டூர் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
    • புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிசாலையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் தோட்டங்கள் மற்றும் விவசாய பகுதிகளுக்கு செல்வதற்கு பிரதான சாலை உள்ளது.

    அதேபோல், மல்லையாபுரம் பகுதி மக்கள் எஸ்.பாறைப்பட்டி, திண்டுக்கல் மற்றும் செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பிரதான சாலை உள்ளது. இந்நிலையில் தற்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஜெ.மெட்டூர் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதனால், எஸ்.பாறைப்பட்டி மக்கள் புதிய 4 வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு வழியாகச் சென்று பின்னர், 4 வழிச்சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இப்படி கடக்கும் போது விபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.

    இதனால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிசாலையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், வேலுச்சாமி எம்.பி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவா ய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கள் அந்த இடத்திற்கு நேரில் சென்று மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்பு இருக்குமா? என ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு கூடியிருந்த எஸ்.பாறைப்பட்டி, மல்லையா புரம் கிராம பொதுமக்கள், விவசாயிகள் தங்களுக்கு இந்த இடத்தில் கண்டிப்பாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து சென்றனர். ஆய்வின்போது, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சக்திவேல், கிராம முக்கிய ஸ்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×