search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் நடந்த போலீஸ் குறைதீர்க்கும் முகாமில் 99 மனுக்கள் பெறப்பட்டன
    X

    நாமக்கல்லில் நடந்த போலீஸ் குறைதீர்க்கும் முகாமில் 99 மனுக்கள் பெறப்பட்டன

    • வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார்.
    • மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார். இதை யொட்டி இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு எஸ்.பி.கலை யரசன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பில் குடும்பப்பிரச்னை, சொத்துப்பிரச்னை உள்ளிட்டவை குறித்து மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அவற்றைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வில், ஏ.டி.எஸ்.பி.க்கள் கனகேஸ்வரி, ராஜு, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களின் மீது விசாரணை நடத்தி பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கினர்.

    Next Story
    ×