search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் 8-ம் நாள் திருவிழா
    X

    நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து பெரிய சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் 8-ம் நாள் திருவிழா

    • நேற்று 8-ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • மாலை 6மணிக்கு 1008 குத்துவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 27-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.

    ஜூலை 11-ந் தேதி ஆனி கொடைவிழா நடை பெற்றது. கொடைவிழாவில் பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    8-ம் நாள் நிகழ்ச்சி

    நேற்று 8-ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையும், அதை தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், பஜனை கோஷ்டியினரின் பஜனையும், பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடை பெற்றது.

    தீர்த்தவாரி

    நேற்று மதியம் 1 மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். மாலை 6மணிக்கு 1008 குத்துவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ஜெகதீசன், முத்துமாலை, செல்வராஜ், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், குணசேகரன், ஜெயராஜ், பெரியசாமி, சிவசுப்பிர மணியன், ஜெயசங்கர், விஜய், முத்துக்குமார், ஆனந்த், சதீஷ்குமார், பால கிருஷ்ணன், கேசவமூர்த்தி, ஜெகநாதன், ஜெயபிரகாஷ், பெரியசாமி, ஈஸ்வரன், சரவணன், ராமஜெயம், முத்துலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தக்கார் ராம சுப்பிரமணியன், குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி இளைஞர் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×