என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
10-ம் வகுப்பு தேர்வு முடிவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.36 சதவீதம் தேர்ச்சி
- மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 13,467 பேரும், மாணவிகள் 12,886 என மொத்தம் 26293 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.
இதில் மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 89.48 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 85.36 பேர் சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதால் கடந்த ஆண்டைவிட 4.12 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஓசூரில் உள்ள 26 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும், கிருஷ்ணகிரியில் உள்ள 58 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும் என மாவட்டத்தில் உள்ள 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்