search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 82 மனுக்கள் பெறப்பட்டது
    X

    பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 82 மனுக்கள் பெறப்பட்டது

    • பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
    • வருகிற 22-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனும் வருவாய் கணக்குத் தீர்வாயம் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் நாகலெட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி கோட்ட்டாசியர் அர்ச்சனா பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    94வருவாய் கிராமங்களை கொண்ட சீர்காழி வட்டத்தில் முதல் நாள் ஓலையாம்புத்தூர், புத்தூர், மாதிரவேளூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.

    இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைளுக்காக 82மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    Next Story
    ×