search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்- பெற்றோரிடம் விசாரணை
    X

    பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்- பெற்றோரிடம் விசாரணை

    • அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
    • தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிறது.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காளீஸ்வரி வழக்கம்போல் பால் கொடுத்துவிட்டு குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.

    இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனே குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தை எப்படி இறந்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×