search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு திட்டத்தில் 68 அரசு பள்ளிகள் தேர்வு
    X

    காலை உணவு திட்டத்தில் 68 அரசு பள்ளிகள் தேர்வு

    • ஈரோடு மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக உணவு சமைப்பதற்காக ஒருங்கிணைந்த சமையற் கூடம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • காலை உணவு வழங்குவதற்கு முன் அதனை பள்ளி மேலாண்மை குழு தரத்தினை உறுதி செய்த பிறகே மாணவ-மாணவி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ-மாணவிகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் மற்றும் மலைப்பகு திகளில் 1,545 அரசு தொடக்கப்ப ள்ளிகளில்(1-5ம் வகுப்பு) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக தமிழக அரசு முதற்கட்டமாக ரூ. 33 கோடியே 56 லட்சம் நிதியை ஒதுக்கியது.

    இதனை கண்காணிக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், மகளிர் மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு போன்ற மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் முதற்கட்டமாக 26 பள்ளிகளும், மலைப்பகுதி யான தாளவாடி தாலுகாவில் 38 பள்ளிகள் என மாவட்டத்தில் மொத்தம் 68 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 3,455 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

    இதில் ஈரோடு மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை ப்பள்ளியில் 1,000 குழந்தைக ளுக்கு உணவு சமைப்பதற்காக ஒருங்கிணைந்த சமையற் கூடம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சமைக்கப்படும் சிற்றுண்டி, அருகிலுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவ,மாணவிகளுக்கு விநியோகிக்கபட உள்ளது.

    இதற்காக முதற்கட்டமாக மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சம் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு திங்கள் கிழமை உப்புமா வகை, செவ்வாய்-கிச்சடி வகை, புதன்-பொங்கல், வியாழன்-உப்புமா வகை, வெள்ளி-கிச்சடியுடன் இனிப்பு சூடாக காலை வழங்கப்படும். இதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.

    அதன்படி, காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், கலப்படம் இல்லாமல் இயல்பான மணம், நிறம் உடைய மற்றும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்றுள்ளவற்றை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தி யுள்ளோம். காலை உணவு வழங்குவதற்கு முன் அதனை பள்ளி மேலாண்மை குழு தரத்தினை உறுதி செய்த பிறகே மாணவ-மாணவி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இதற்காக சமையற்கூ டங்கள், ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் நிறை வடைந்ததும், அரசு அறி விக்கும் நாளில் இருந்து காலை சிற்றுண்டி மாணவ-மாணவி களுக்கு வழங்கப்ப டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×