search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு
    X

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு

    • அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள்.
    • அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள்.

    சென்னை :

    தமிழகத்தில் இதுவரை அரசு வேலைவாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலை வாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அரசு வேலைவாய்ப்புக்காக 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள், 268 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.48 லட்சம்; 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம்; 31 முதல் 45 வயதுடையவர்கள் 18.30 லட்சம்; 46 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,602 பேர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகள் என்று அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×