search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க நிர்வாகி கார் டிரைவர் கொலை கைதான 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    கொலை செய்யப்பட்ட சுரேஷ்.

    அ.தி.மு.க நிர்வாகி கார் டிரைவர் கொலை கைதான 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்

    • நிறுவனத்திற்கு சேரவேண்டிய ரூ.6 லட்சத்தை சுரேஷ் கையாடல் செய்து தலைமறைவானார்.
    • மீதி பணத்தை கேட்ட நாங்கள் 6 பேரும் சுரேசை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்(28). இவர் அ.தி.மு.க பிரமுகர் நடராஜனிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் நடத்தி வரும் நெய் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உறவினர் வடிவேலை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மனோகரன்(45), பாண்டி(37), தேனியை சேர்ந்த சிவஞானம்(58), நிலக்கோட்டையை சேர்ந்த சதீஸ்குமார்(29), திருப்பூரை சேர்ந்த முத்துக்குமார்(23) ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கார் டிரைவரை ெகான்றது ஏன் என 6 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சுரேஷ் வேலை பார்த்த இடத்தில் வடிவேல், மனோகரன், பாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்திற்கு சேரவேண்டிய ரூ.6 லட்சத்தை சுரேஷ் கையாடல் செய்து தலைமறைவானார். இதனைதொடர்ந்து தென்காசியில் இருந்த அவரை அம்பிளிக்கை அழைத்து வந்தனர்.

    பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தார். இதனால் மீதி பணத்தை கேட்ட நாங்கள் 6 பேரும் சுரேசை கடுமையாக தாக்கினோம். இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடினோம். அதன்பின்னர் வடிவேல் மற்றும் உறவினர்களுடன் சுரேசின் உடலை மயானத்தில் எரித்தோம்.

    இருந்தபோதும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×