

கோவில்பட்டி:
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி அம்பாள் நகர், பூரணம்மாள் காலனி, பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராஜூவ்நகர் 6ஆவது தெரு, முடுக்கு மீண்டான்பட்டி, கரடி குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சி.ஆர். காலனி, கயத்தாறு அண்ணா நகர் ஆகிய 6 இடங்களில் ரூ.29.17 லட்சம் மதிப்பில் 6 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை பொறியாளர் குப்புராணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு மின்மாற்றிகளை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில், உதவி செயற்பொறியாளர்கள் குருசாமி (நகர்ப்புறம்), மிகாவேல் (ஊரகம்), முனியசாமி (கயத்தாறு), தங்கராஜ் (கட்டுமானம்), உதவி மின் பொறியாளர்கள் லட்சுமி பிரியா, மாரீஸ்வரன், கண்ணன், விஷ்ணுசங்கர் சுரேஷ், அருண்நேரு, மின்வாரிய பணியாளர்கள்,
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலர் விஜய பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, ஜெய லலிதா பேரவை வடக்கு மாவட்ட செயலர் செல்வ குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.