search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
    X

    மண் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

    • மண் ஏற்றி செல்வதை பார்த்த அவர் லாரியை நிறுத்தி விசாரணை
    • அனுமதி வழங்கப்படாத இடத்திற்கு ஏரி மண்ணை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆற்காடு:

    ஆற்காடு வட்டம், சாத்தூர் கிராமத்தில் கிராம ஊராட்சி செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை ராணிப் பேட்டை உதவி கலெக்டர் வினோத்கு மார் ஆய்வு செய்தார்.

    பின்னர் வரும் வழியில் 2 லாரிகள் மண் ஏற்றி செல்வதை பார்த்த அவர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ஆற்காடு வட்டம் விளாரி கிராமத்தில் ஏரியில் அரசு அனுமதி பெற்று மண் எடுக்கப்பட்டு வருகின்றது, ஆனால் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு மண்ணை கொண்டு செல்லாமல் அனுமதி வழங்கப்படாத இடத்திற்கு ஏரி மண்ணை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அங்கிருந்த 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரிகள் ஆற்காடு தாசில்தார் வசந்தி மேற்பார்வையில் திமிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் 5 லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.

    Next Story
    ×