search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எட்டிமடையில் பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு
    X

    எட்டிமடையில் பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு

    • மேகலா தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார்
    • கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.

    கோவை

    கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கதிரேஷ். இவரது மனைவி மேகலா (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார். மொபட் எட்டிமடையில் உள்ள தியேட்டர் அருகே சென்ற போது அந்த வழியாக மற்றொரு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் மேகலாவின் மொபட்டை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவரது மொபட்டின் சாவியை பறித்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த மேகலா இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×