search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை விமான நிலையத்தில் 4,393 பேரிடம் காய்ச்சல் பரிசோதனை
    X

    கோவை விமான நிலையத்தில் 4,393 பேரிடம் காய்ச்சல் பரிசோதனை

    • 3 பேருக்கு ெகாரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவை,

    சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூா், ஷாா்ஜா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு ெகாரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஷாா்ஜாவில் இருந்து ஜனவரி 16-ந் தேதி கோவை விமான நிலையம் வந்த பயணிகளில் ரேண்டம் அடிப்படையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன் பட்டியைச் சோ்ந்த 38 வயது வாலிபருக்கு ெகாரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடா்ந்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு சம்பந்தப்பட்டவரின் விவரங்கள் கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை விமான நிலையத்தில் ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு ெகாரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து கோவை சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 4,393 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 148 பேரிடம் இருந்து ரேண்டம் அடிப்படையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவா்களில் கோவை, திருப்பூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா் வீதம் 3 பேருக்கு ெகாரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே ெகாரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா்.

    இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவரைத் தவிா்த்து மற்ற அனைவருக்கும் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல்லை சோ்ந்தவரின் சளி மாதிரிகள் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று கண்டறிவதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×