search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவிப்பு

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணா–நிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், பாளை தொகுதி எம்.எல்.ஏ.வுமாக அப்துல்வகாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, அவைத்தலைவர் சுப சீதாராமன், கவுன்சிலர்கள் கந்தன், உலகநாதன், ரவீந்தர், முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், கலைஞர் தமிழ்சங்க பேரவை பழனிவேல் பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் களக்காட்டில் உள்ள அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாைத செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் சித்திக், மாநில வர்த்தக அணி கிரகாம்பெல், தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பேரூர், ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×