என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியம்பட்டி அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
- பெருமாள் கனி 20 வெள்ளாடுகளை வீட்டின் அருகில் உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.
- இந்நிலையில் காலையில் பார்த்தபோது ஒரு வெள்ளாடு மற்றும் குட்டிகளை காணவில்லை.
புதியம்புத்தூர்:
புளியம்பட்டி அருகே உள்ள மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி பெருமாள் கனி (வயது56). இவர் 20 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். அவர் ஆடுகளை வீட்டின் அருகில்உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.
இந்நிலையில் காலையில் பார்த்தபோது ஒரு வெள்ளாடு மற்றும் குட்டிகளை காணவில்லை. இது குறித்து பெருமாள்கனி நாரை கிணறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி என்.புதூர் கீழதெருவை சேர்ந்த கமலேஷ் கிரண் (21), ஓட்டப்பிடாரம் ரைஸ்மில் காலனியை சேர்ந்த முருகன் (19), மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த பாலா (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 17 வயது சிறுவனை கைது செய்து நெல்லை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் குட்டிகளை மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்