search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் 306 திருவிளக்கு பூஜை
    X

    திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் 306 திருவிளக்கு பூஜை

    • ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.
    • சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மறுநாள் காலையில் யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து அன்னா பிஷேகமும் நடந்தன. மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் பின்னர் அன்னதானமும் நடந்தன.

    இரவில் 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். உழவார பணிகளில் ஈடுபட்ட பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பூஜை ஏற்பாடுகளை ஆலய பூசாரி அய்யப்ப பட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, போகன், மண்டக படிதாரர்கள் கனகம்மாள், தொழிலதிபர் சிவக்குமார், திருச்செந்தூர் தபால் துறை ஊழியர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×