search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் விதிமுறைகளை பின்பற்றாத 30 பள்ளி வாகனங்களை இயக்க தடை
    X

    பொள்ளாச்சியில் விதிமுறைகளை பின்பற்றாத 30 பள்ளி வாகனங்களை இயக்க தடை

    • தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் ஆய்வு நடந்தது.
    • டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூட பஸ்களுக்கான போக்குவரத்து ஆய்வு, தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் நடந்தது.

    உதவி கலெக்டர் பிரியங்கா, வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை வட்டாரத்தில் உள்ள 66 தனியார் பள்ளிக்கூடங்களில் 374 பஸ்கள் இயங்கி வருகின்றன.

    அந்த வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 30 வாகனங்களில் கண்காணிப்பு காமிரா, வேகக்கட்டுப்பாடு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவை இடம்பெறாதது தெரியவந்தது.

    படிக்கட்டுகளிலும் உறுதித்தன்மை இல்லை. எனவே அந்த வாகனங்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிக தடை விதித்து உள்ளனர்.

    அப்போது பள்ளிக்கூட வாகனங்களில் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அந்த வாகனங்களை மீண்டும் தணிக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×