என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பெண்கள்.
கதண்டு கடித்து 3 பெண்கள் காயம்
- அவர்களை அக்கம் பக்கத்தினர்மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர்.
- இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள உத்திரை கிராமத்தில் இன்று நூறு நாள்வேலைக்கு ஏராளமான பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செல்லும் வழியில் தென்னை மரத்தில் இருந்த கதண்டு திடீரென பறந்து வந்து திருப்புறம்பயம் கண்ணுக்குடி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோகிலா, ரவிச்சந்திரன் மனைவி மகாலட்சுமி ,நடேசன் மனைவி நவநீதம் ஆகிய 3 பேரையும் கதண்டு சுற்றி சுற்றி கடித்ததில் தலை மற்றும் கை கண்களில் காயம் ஏற்பட்டது.
அவர்களை அக்கம் பக்கத்தினர்மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர்.
அங்குஅவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






