அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்

அரசு மருத்துவமனையில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது.
ஆலயம் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3சக்கர வாகனம் வழங்கபட்டது.
ஆலயம் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3சக்கர வாகனம் வழங்கபட்டது.
Published on

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனா பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளியவர்களுக்கு காலை உணவு, சில முக்கிய தினங்களில் மூன்று விலை உணவும் ஆலயம் அறக்கட்டளை நண்பர்கள் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது.

சுதந்திர தின ஆண்டினை முன்னிட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும், 25 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் மற்றும் உணவும் சுமார் 25 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஒவ்வொரு நாளும் 200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை தலைவர் ஏ.கே.குமார் துணை தலைவர் ஆர் கே குமணன் எம்சி செயலாளர் செயலாளர் ஜி.மோகன்ராஜ் பொருளாளர் எஸ் கணேசன் துணைச்செயலாளர் ஜி.மனோஜ் குமார் மற்றும் அறங்காவலர்கள் ஆர்.விக்ரம் ராஜா இயேசுராஜ் சந்தோஷ் குமார் நகர்மன்ற உறுப்பினர் பி.கே.நாடிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் எஸ். சிவா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com