

பழனி:
பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிைடத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட போலீசார் பழனி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சிவகிரிப்பட்டி ஊராட்சியில் சேரன் ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி இருப்பதாக தெரிய வந்தது. அங்கு நடத்திய சோதனையில் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த 1050 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதே போல் நெய்க்காரப்பட்டி சின்னக்கடை வீதியில் ஒரு வீட்டில் இருந்து 1.50 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கியது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.